

தேவையானவை :
கடலை மாவு - அரை கிண்ணம்
அரிசி மாவு - கால் கிண்ணம்
உடைத்த முந்திரி - 10
புதினா - 1 கப்
நறுக்கிய வெங்காயம் - அரை கிண்ணம்
பச்சை மிளகாய், சோம்பு, இஞ்சி - பூண்டு அரைத்த விழுது - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை : புதினாவை ஆய்ந்து கழுவி பொடிப் பொடியாக நறுக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, நறுக்கிய வெங்காயம், உடைத்த முந்திரி, பச்சை மிளகாய், சோம்பு, பூண்டு அரைத்த விழுது சேர்த்து நன்கு கலந்து புதினாவும் சேர்க்கவும். லேசாக தண்ணீர் தெளித்து புரட்டினாற்போன்று பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய்யைக் காயவைத்து மாவை உதிர்த்து பகோடாக்களாக போட்டு பொரித்தெடுக்கவும்.
சுவையான புதினா பக்கோடா தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.